தேர்தல் சட்டம்:
தேர்தல் சுதந்திரமான முறையில் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டவைகள்:
- உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சி கொண்டது இந்திய நாடாகும். நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- மக்களாட்சி தலை துவங்குவதற்கு இதற்கான தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றன.
- மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு மக்களாட்சியின் மீது ஒரு நம்பிக்கை வருகின்றன. இதற்கான முறையான தேர்தல்கள் நடத்தி தன்னாட்சி பொருந்திய தேர்தல் ஆணையம் இந்திய அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
- சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு முக்கியமான பொறுப்பாகும்.
தேர்தல் ஆணையம்:
சட்டமன்றங்கள் நாடாளுமன்றம் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறித்த தேர்தல் பற்றிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு கண்காணிப்பும் நெறிமுறைகளும் மற்றும் கட்டுப்பாடு மேலும் அவற்றிற்கான தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடும் கடமையாக உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையரையும் குடியரசுத் தலைவரையும் அவ்வப்போது நிறையம் செய்யும் மற்ற தேர்தல் நேரையும் தேர்தல் ஆணையம் கொண்டிருக்கும். தலைமை தேர்தல் அனைவரையும் மாற்ற தேர்தல் ஆணையர்களையும் நாடாளுமன்றம் இதுகுறித்து இயற்றும் சட்டத்திற்கு இணங்க குடியரசுத் தலைவர் நியமிக்கப்படுகின்றார்.
தேர்தல் ஆணையர் சுமார் ஐந்து ஆண்டு காலத்திற்கு தனது பொறுப்பில் இருக்கின்றார். தேர்தல் ஆணையரின் சம்பளம் மற்றும் பணிகள் திறன் நிதியத்தில் இருந்து வழங்கப்படுகின்றன. தனது பணி காலத்தில் சம்பளமானது பணி நிபந்தனைகளோ மாற்ற முடியாது.
இவையாவும் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மைகளை காப்பாற்றும் வழிமுறைகள் ஆகும். தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். எனவே அரசியல் அல்லது நிர்வாகம் இருக்குதல் இன்று சுதந்திரமாக செயல்பட வழி வகுக்கும். இதனால் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் ஒருதலைச் சார்புமின்றி செயல்பட உறுதி செய்யப்படுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் பணிகள்:
324 இன் கீழ் பணிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன:
- நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் குடியரசு துணைத்தலைவர் வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் மீது கண்காணிப்பு நெறிமுறை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றினை கொண்டிருத்தல்.
- மேற்குறிப்பிட்ட தேர்தல்களை நடத்துதல்
- நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை வினா குறித்தும் குடியரசுத் தலைவருக்கும் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை குறித்து அலுவலருக்கும் ஆலோசனை வழங்குதல்.
- தேர்தல் ஏற்பாடுகள் அல்லது தேர்தல் குறித்த தகராறுகளை விசாரிக்க தேர்தல் அலுவலர்களை நியமித்தல்.
- தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்படுவது குறித்து தகராறுகளை தீர்த்தல்.
- பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தொலைக்காட்சிகளும் வானொலிகளும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செயல்முறையில் நாளையும் நேரத்தையும் ஒதுக்குதல்.
- தேர்தல் அட்டவணையை தயாரித்தல் நாட்களை குறித்தல் வெளியிடுதல் மற்றும் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தல்.
- தேர்தலை நடத்துவதற்கு தேவையான அலுவலர்களை நியமனம் செய்தல்.
- தேர்தலின் போது வேட்பாளர் வரம் கட்சிகளும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல்.
- வாக்காளர் பட்டியலில் பிழைகள் ஏதும் இன்றி தயார் நிலையில் அவற்றை வைத்திருத்தல்.
- தேர்தல் குறித்த மற்ற பொருட்களை கவனித்தல்.
- தற்போது இந்திய தேர்தல் ஆணையம் ஒரு முதன்மை தேர்தல் ஆணையரையும் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களையும் கொண்டதாக அமைக்கப்பட்டது.
தேர்தல் சட்டம் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் சட்டமேற்றும் அதிகாரம்:
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்தல் நிலை நடத்துவதற்காக குறிப்பிடப்படுகின்றன:
- வாக்காளர் பட்டியல் தயாரிப்பு
- தொகுதிகளை பிரித்தல்
- அதன் தொடர்பான அனைத்து பொருட்கள் குறித்தும் சட்டம்
- உறுப்பு 327 இன் கீழ் அதிகாரங்கள்
- 1950 மற்றும் 1951ம் ஆண்டுகளின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள்
- 1952 ஆம் ஆண்டின் குடியரசு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் சட்டம்
- 1952 ஆம் ஆண்டின் தொகுதி பிரிவு அணை சட்டம் இந்த உறுப்பின் கீழ் உள்ளன.
நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தினை மீறியோ அல்லது தன்னிச்சையாகவோ செயல்பட முடியாது. தேர்தல் ஆணையத்தின் மீது இரண்டு கட்டுப்பாடுகள் உள்ளன.
நாடாளுமன்றமோ அல்லது மாநிலச் சட்டமன்றங்களும் ஒரு முறையான சட்டத்தை இயற்றி இருப்பின் சட்டங்களுக்கும் இணங்க தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும். இரண்டாவதாக சட்டத்தின் ஆட்சிக்கு இணங்க செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையில் இயற்கை நீதிபதிகளுக்கு உட்பட்டு அது செயலாற்ற வேண்டும். சட்டத்தில் கூறப்படாத பகுதியில் தேர்தல் ஆணையம் தன் விருப்பம் போல் செயல்படலாம்.
வாக்களிக்கும் உரிமை சட்ட உரிமையாகும். இது அடிப்படை உரிமை அன்று....
வயது வந்த அனைவருக்கும் வாக்களிப்பு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டில் 61வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக வாக்களிப்பதற்கான குறைந்த அளவு வயது 21 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்